இந்தியாவின் மின் தேவை கடந்த ஆண்டை விட 13.2 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்டுள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக, ஆட்டோமொபைல் துறை, உற்பத்தி துறை, கட்டுமானத்துறை உட்பட பல்வேறு துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் இந்த துறை சார்ந்த நிறுவனங்கள், தனது ஊழியர்களுக்கு, விடுமுறைகளை அறிவிப்பதால், உற்பத்தி நிறுத்தப்பட்டது. பெரிதும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றில் நுகர்வு வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த மாதம், மகாராஷ்டிராவில் மின் தேவை 22.4 சதவீதம், குஜராத்தில் 18.8 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவின் மின்சாரத் தேவை, கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படி, 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், 13.2 சதவீதம் சரிந்திருப்பதாக, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரியவந்துள்ளது.